புதன், 30 ஜனவரி, 2013

மகிழினி மணிமாறன் – தெரியுமா?

மகிழினி மணிமாறன் – தெரியுமா?
               
                                                            கும்கி படத்தில் வரும் ‘கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் (சொய் சொய்ங்)’ என்று மனதை கொள்ளை கொள்ளும் பாடல் இவர் பாடியது தான். அவரின் மண்வாசனை கலந்த குரலில் அந்தப் பாடலை கேட்கும் போதே மனம் சொக்கித்தான் போகிறது. இவருக்கு விகடன் விருதுகள் 2012 ‘சிறந்த பாடகி’க்கான விருது கொடுத்து கௌரவித்துள்ளது. மேலும் பல படங்களில் இவர் பாடுவார் என்று நம்புவோமாக. பாராட்டுகள் மகிழினி.

வடக்கிலிருந்து, வெளிநாட்டில் இருந்து வரும் (தமிழின் மென்னியை திருகும்) பாடகர்களை எல்லாம் கொண்டாடுகிறோம் தமிழரான இவரையும் கொஞ்சம் கொண்டாடினால் என்ன?

இதில் ஒரு வருத்தம் என்னவென்றால்,இவரின் புகைபடத்தை காண எண்ணி கூகுளில் சல்லடை போட்டு சலித்தாலும் ஒன்று கூட மாட்டது.அதற்க்கு அவர் பெயர் கூட காரணமாய் இருக்கலாம்.
தயவுசெய்து இவரின் புகைப்படத்தை உங்களுக்கு அறிமுகமான வலைதளங்களில் பதிவேற்றி ஒரு தமிழச்சியை பெருமைபடுத்துங்கள்.

4 கருத்துகள்:

  1. நல்ல தகவல் . இந்த மாதிரி உள்ளூர் கலைஞர்களை நாம் தான் பெருமைப்படுத்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல குரல்வளம்... பாட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறது... நல்ல எதிர்காலம் அவருக்கிருக்கிறது... பகிர்ந்த தங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு